Pages

Tuesday, July 5, 2011

விடை தெரியாக் கேள்விகள் சில...


* வயசுப் பிள்ளைங்க தவறு செய்யும் போது உடனே அதட்டும் பெற்றோர் யாரும் நாமும் இவ்வயதில் இப்படித்தானே இருந்தோம் என உணர்ந்து அணைப்பதில்லையே???

* எவ்வளவுதான் நல்லவராக இருந்தாலும் அரசியலில் குதித்து ஒரு பதவிக்கு வந்தவுடன் தன் சுயம் இழந்து விடுவதேன்???

* வீட்டில் அனைவரும் ஒன்றாய் அம்ர்ந்திருக்கையில் செல்லமகள் கேட்பாள் " அப்பா செத்ததுக்கு அப்புறம் நாம எங்க போவோம்???"

* பணம் அதிகமாக வைத்திருக்கும் எவருக்கும் தானம், தர்மம் போன்றவற்றில் ஈடுபாடு இருப்பதில்லை. ஏன்???

* என்னதான் தத்துவம் பேசினாலும் வருமானவரி கட்டும்போது போலி ரசீதுகளை சேகரித்து வரியை குறைக்க முயல்வதேன்???

* என்னதான் நெருக்கமான நட்பாயினும், அவர்களை பார்க்கும்போது அவர்கள் என்றோ நம்மிடம் கடனாக வாங்கிய பணம் கண்முன் வந்து போவதேன்???

* என்னதான் உருக உருக காதலித்தாலும் திருமணத்துக்கு பிறகு நிலை தலைகீழாவதேன்???

* எவ்வளவு அழகான சினிமா நடிகையும் சில கோணங்களில் பார்க்கையில் பயமுறுத்துவதேன்???

0 கருத்துக்கள்: