Pages

Thursday, June 24, 2010

கண்கள்


அன்றொரு நாள்
மதிய வேளையில்
சூரியக் கதிரிலிருந்து
உனைக் காக்க
கண்களை மட்டும் விட்டு விட்டு
முகம் மறைத்து
வந்தாய் நீ!
இனிமேல் வரும்போது
முகம் முழுதாய் மறைத்து விடு!
இல்லையேல்
முகத்திரையை விலக்கி விடு!
உன் கண்கள் எனும்
கதிர்வீச்சில் கருகிச்சாயும்
என் போன்றோர்
உயிர் பிழைக்க வேண்டி!

- அன்பரசன்

5 கருத்துக்கள்:

Chitra said...

உன் கண்கள் எனும்
கதிர்வீச்சில் கருகிச்சாயும்
என் போன்றோர்
உயிர் பிழைக்க வேண்டி!

..... nice. :-)

அன்பரசன் said...

நன்றி சித்ரா மேடம்

Unknown said...

நல்லாருக்குங்க

அன்பரசன் said...

நன்றிங்க கலாநேசன்

அம்பிகா said...

\\உன் கண்கள் எனும்
கதிர்வீச்சில் கருகிச்சாயும்
என் போன்றோர்
உயிர் பிழைக்க வேண்டி\\
நல்லாயிருக்கு அன்பரசன்.