Pages

Sunday, September 13, 2009

ப.பி கவிதைகள்

நான் படித்து ரசித்த கவிதைகள் சில உங்களுக்காக..

நோக்கல்
அண்ணலும் நோக்கினேன்
அவளும் நோக்கினாள்
இடையில்
அவள் அண்ணனும் நோக்கினான்
ஹாஸ்பிடலில் நான்!!!

பாதிப்பு
எதார்த்தமாக
பார்க்கையில்
எவ்வித பாதிப்பும் இல்லை.
கண்களை சுருக்கி
பார்த்த போது கூட
கவனம் சிதறவில்லை.
ஓரப்பார்வையில்
பார்த்த போது கூட
ஓரளவு தான்
பாதிப்பு தெரிந்தது.
ஆனால்
நீ பார்க்காமல்
போனபோது தான்
பாவி மனம்
என்ன பாடு படுகிறது....

சிரிப்பு
என்னை பார்த்து
அவள் சிரித்தாள்..
அவளை பார்த்து
நான் சிரித்தேன்..
எங்களிருவரையும் பார்த்து
ஊரே சிரித்தது!!!!

இவை எல்லாம் எங்கேயோ எதிலோ படித்தவை.

Wednesday, September 9, 2009

ரோஜா, முள்

பெண்ணே
உன்னை ரோஜா என நினைத்தேன்.
உனது மென்மையை பார்த்து...
ஆனால்,
நீயோ
உனது வன்மையை காட்டி விட்டாய்
என்னை முள்ளாக குத்தியதில் இருந்து...
- அன்பரசன்

Sunday, September 6, 2009

பொன்மொழிகள் சில

சமீபத்தில் அர்த்தமுள்ள இந்துமதம் நான்காம் பாகம்(துன்பங்களிலிருந்து விடுதலை) படிக்க நேர்ந்தது.

அதில் எனக்கு பிடித்தவை சில உங்களுக்காக...


* ஓவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் ஒரு முறையாவது மரணத்தை பற்றி சிந்திக்கிறான்.
* தயிரும் கீரையும் இரவில் தவிர்ப்பது நல்லது.
* வறுமையை விட சிறந்த பள்ளிக்கூடம் எதுவும் கிடையாது.
* இளம் வயதில் இருந்து மரண காலம் வரை ஒருவன் நடந்து கொண்டே திரிந்தால் பெரும்பாலான நோய்கள் போய்விடும்.
* இன்பமும் துன்பமும் நேரத்தையும் சூழ்நிலையையும் பொறுத்தவை.
* நம் நாட்டில் பெரும்பாலான பெரிய மனிதர்கள் மனிதாபிமானம் இல்லாதவர்கள்.
* பகைவனே இல்லாமல் இருப்பது எப்படி?
சில விசயங்களை ஜீரணிக்க வேண்டும்.
சில விசயங்களை அலட்சியப்படுத்த வேண்டும்.
* ஆத்திரமூட்டும் கேள்விகளை அலட்சியமாக சமாளித்தால் பகைவனே நண்பனாகி விடுவான்.
* இனமும் குணமும் தான் முக்கியமே தவிர பணம் அல்ல.
* ரத்தத்தில் இருக்கும் மின்சார வேகம் செல்வத்திலோ , செல்வாக்கிலோ இல்லை.
* உனக்கு கீழே உள்ளவர் ஒரு கோடி , நினைத்து பார்த்து நிம்மதி தேடு.
* 'துன்பத்திலெல்லாம் குறைந்த பட்ச துன்பம் நமக்கு வந்தது தான் ' என கருதினால் எந்த துன்பமும் துன்பமாக இருக்காது.
* யாராவது தாறுமாறாக பேசினால் நீங்கள் சொல்வதே சரி என்று சொல்லுங்கள்.
* வருகின்ற துன்பங்களை எல்லாம் ஒன்று,இரண்டு,மூன்று என அனுபவங்களாக சேகரித்து கொள்ளுங்கள்.
* புதுப்புது அனுபவமாக சேகரியுங்கள் . ஒரே அனுபவத்திற்கு இரண்டு , மூன்று என மதிப்பு போடாதீர்கள்.


பின்குறிப்பு : ரூம்ல பொழுது போகம இருந்தபோது நண்பர் ஒருவர் இந்த புத்தகத்தை படிக்க சொல்லி கொடுத்தார். அதன் விளைவு தான் இது. நான் மட்டுமே இதற்க்கெல்லாம் காரணம் இல்லீங்கோ.

Thursday, September 3, 2009

ஆசை


வசித்திட ஆசை!
தாய் தந்தையோடு
அதே பழைய ஓட்டு வீட்டில்....
பருகிட ஆசை!
அதிகாலையில்
சகோதரி தரும் தேனீரை...
ருசித்திட ஆசை!
அம்மா கையால் சமைத்த
அறுசுவை உணவை...
திளைத்திட ஆசை!
குடும்பத்தாரின்
பாசம் மற்றும் பரிவினில்...
உழைத்திட ஆசை!
வியர்வை சிந்த
சொந்த நிலத்தினில்...
சுற்றிவர ஆசை!
சொந்த ஊரை
பழைய நண்பர்களோடு...
உறங்கிட ஆசை!
நிம்மதியாய்
எனது பழைய கயிற்று கட்டிலில்...
கிடைத்திட ஆசை!
விரைவினில்
இவை அனைத்தும்...

-
அன்பரசன்