Pages

Sunday, September 13, 2009

ப.பி கவிதைகள்

நான் படித்து ரசித்த கவிதைகள் சில உங்களுக்காக..

நோக்கல்
அண்ணலும் நோக்கினேன்
அவளும் நோக்கினாள்
இடையில்
அவள் அண்ணனும் நோக்கினான்
ஹாஸ்பிடலில் நான்!!!

பாதிப்பு
எதார்த்தமாக
பார்க்கையில்
எவ்வித பாதிப்பும் இல்லை.
கண்களை சுருக்கி
பார்த்த போது கூட
கவனம் சிதறவில்லை.
ஓரப்பார்வையில்
பார்த்த போது கூட
ஓரளவு தான்
பாதிப்பு தெரிந்தது.
ஆனால்
நீ பார்க்காமல்
போனபோது தான்
பாவி மனம்
என்ன பாடு படுகிறது....

சிரிப்பு
என்னை பார்த்து
அவள் சிரித்தாள்..
அவளை பார்த்து
நான் சிரித்தேன்..
எங்களிருவரையும் பார்த்து
ஊரே சிரித்தது!!!!

இவை எல்லாம் எங்கேயோ எதிலோ படித்தவை.

1 கருத்துக்கள்:

cheena (சீனா) said...

அன்பரச

அனைத்துமே ரசித்த ரசிக்க வேண்டிய கவிதைகள் தான்

நல்வாழ்த்துகள்