Pages

Sunday, October 31, 2010

மணநாள் வாழ்த்து

ஈருடல் ஓருயிராய்
சில பத்தாண்டுகள்
இணைபிரியா வாழ்வு கண்டு
எமை பெற்றெடுத்து
சீராட்டி தாலாட்டி
சோறூட்டி ஆளாக்கி
படிப்பறிவித்து
இந்நிலைக்கு கொண்டுவர
எவ்வளவு பாடுபட்டீர்!
உம்மில் பிறந்தமைக்கு
யாம் பெருமை கொண்டோம்.
என்றேனும் ஓர்நாள்
எமை பெற்றமைக்கு
நீர் பெருமைப்படுவீர்.
உம்மை வாழ்த்த
வயதின்மையால் வணங்குகிறோம்.


இன்று திருமணநாள் காணும் என் பெற்றோருக்கு இதனை உரித்தாக்குகிறேன்.

Wednesday, October 27, 2010

எறும்பை ஒழிப்பது எப்படி?


கேள்வி : எறும்பை ஒழிப்பது எப்படி? விரிவாக விளக்குக. [எட்டு மதிப்பெண்கள்]

(இரண்டு மார்க் கேள்வியான இதை எட்டு மார்க்குக்கு கேட்டதைக் கண்டு மிரண்ட ஒரு புத்திசாலி மாணவனின் பதில் இதோ)

பதில் : எந்த ஒரு உயிரையும் கொல்வது எனக்கு பிடிக்காது. இருப்பினும் எட்டு மதிப்பெண்ணுக்காக இன்று எறும்பை கொல்லவேண்டிய கட்டாயத்தில் இதை எழுதுகிறேன்.
எறும்பை கீழ்க்காணும் வழிகளில் கொல்லலாம்.

* கையில் பிடித்து நசுக்கலாம்.
* காலால் மிதித்து கொல்லலாம்.
* விசப்பொடியை தூவி கொல்லலாம்.
* குவாட்டர்ல தண்ணி மிக்ஸ் பண்ணாம கொடுத்து கொல்லலாம்.
* சிகரெட் லைட்டரால பொசுக்கலாம்.
* பிடிச்சு தண்ணிதொட்டில அமுக்கி மூச்சு திணற வச்சு கொல்லலாம்.
* முகத்தில தலையணையை வைத்து அமுக்கி கொல்லலாம்.
* சீனில சயனைடு கலக்கி கொடுத்து கொல்லலாம்.
* பிளேடால துண்டு துண்டா அறுத்து கொல்லலாம்.
* கொதிக்கிற எண்ணைச்சட்டில போட்டு கொல்லலாம்.

இதெல்லாம் கஷ்டமாக இருந்தால் ஒரு எளிய வழி உள்ளது. அது என்னவென்றால் முதலில் மிளகாய்பொடியை சீனியில் கலக்கி எறும்பு வரும்வழியில் வைக்க வேண்டும். அது சாப்பிட்டவுடனே அதிக காரம் காரணமா தண்ணி தாகம் எடுக்கும். தண்ணி குடிக்க பெரிய தொட்டிக்கு போகும்போது அதை உள்ள தள்ளி விட்டுறனும். ஒடம்பெல்லாம் நனஞ்சுபோயி அதை காய வைக்க தீக்கு பக்கத்தில போகும்போது தீயில ஒரு பாம் போடுங்க. உடனே அதை ஹாஸ்பிட்டல்ல அவசரவார்டுல சேர்ப்பாங்க. அங்க யாரும் இல்லாத போது நீங்க மட்டும் தனியா போயி அதோட முகத்தில மாட்டி இருக்கிற ஆக்சிஜன் மாஸ்க்க எடுத்துடுங்க. வேலை ரொம்ப சுலபமா முடிஞ்சிடும்.

இவ்வாறு மேற்க்கண்ட வழிமுறைகளில் எறும்பினை கொல்லலாம்.

(ங்கொய்யால.. எங்க கிட்டயேவா? ரெண்டு மார்க் கேள்வியா நீ எட்டு மார்க்குல கேட்ட எழுத மாட்டோம்னு நெனச்சியா? எட்டு மார்க் கிடைக்குதுன்னா நாங்க யாரவேணுமின்னாலும் கொள்வோம். எறும்பெல்லாம் ஒரு மேட்டரா?)

பி.கு :
* ஜெயந்த்க்கு உதவியா இருக்கும்னு நெனக்கிறேன்.
* அந்த மாணவன் யாருன்னு கேக்காதீங்க? சொல்லமாட்டேன்..சொல்லமாட்டேன்..ரகசியம்..ரகசியம்..

Friday, October 22, 2010

சுறுசுறுப்பு

விடியகால நாலர மணி. அம்மா கொரலு "கண்ணு, எழுந்திரிப்பா. வெதப்புக்கு ஆள் கூப்புட்டுருக்கோம். காப்பிய குடிச்சுட்டு வெளிய போயிட்டு வந்து சோளத்த பையில கட்டி வையி". மொகங்கழுவி காப்பித்தண்ணிய குடிச்சுட்டு வெளிய போயிட்டு வந்து சாமத்துல ரெண்டு மணிக்கு ஊறப்போட்ட சோளத்த தண்ணி வடிச்சு பையில கட்டி முடிச்சா மணி அஞ்சரை ஆயிருச்சு.

அப்படியே ஒரம், சோளத்த வண்டில ஏத்தி ஆளுங்களையும் அனுப்பிட்டு பாத்தா மணி ஆறு. அப்புறமா கட்டுத்தொறக்கு போயி ரெண்டு உருப்புடியோட சாணி வழிச்சு கட்டுத்தொறய கூட்டி சுத்தம் பண்ணி பால கறந்து முடிச்சுட்டு மாட்டுக்கும் கன்னுக்கும் தண்ணி கட்டி தீனி போட்டுட்டு பால் கேன எடுத்துட்டு போயி கடையில ஊத்திட்டு பாத்தா மணி ஏலு.

அதுக்கப்புறமா அவசர அவசரமா ஒருவாயி கரசோறு குடிச்சிட்டு தண்ணிக்கொடம் எடுத்துக்கிட்டு காட்டுக்கு போனா அங்க ஒரம் சோளம்-லாம் ஒரே எடத்துல கெடக்கு. அதையெல்லாம் வெதப்புக்கு தகுந்த மாதிரி அங்கங்க பிரிச்சு வச்சுட்டு ஆளுங்களுக்கு தீர தீர ஒரம் சோளம் அப்பறம் எடஎடயே தண்ணி கொடுத்து முடிச்சா மணி பத்து.

அப்பறம் அங்க அம்மா கையில பெனஞ்ச சோறு ஒருவாயி சாப்புட்டு மூணு மணி வரைக்கும் ஆளுங்களுக்கு தேவயான ஒரஞ்சோளம் எடுத்துட்டு ஏர் கூடவே நடந்து, எடைல யாருக்காது மாத்திவுட்டு இப்படியா வெதப்பு முடிச்சு வீடு கெளம்பியாச்சு. வீடு போனதுக்கு அப்பறம் நல்லா கரசமண்ணு போக தேச்சு குளிச்சா மணி நாலரை.

மாடு கன்னுல்லாம் காலைலருந்து கட்டியே கெடக்கும். அதுக்கு போயி புல்லறுத்து கொண்டாந்து போட்டுட்டு வீடுவந்து கட்டல்ல சாஞ்சா மணி அஞ்சர. ஒரு ஆறு மணிக்காட்ட போயி பால் கறந்து கொண்டாந்து கடையில ஊத்திட்டு ஊட்டுக்கு வந்தா மணி ஏழு.

அப்பறம் காலைல இருந்து பாக்காத நம்ம பசங்கள பாக்கறதுக்கு ஒரு ரவுண்டு போயிட்டு நாயம் பேசிட்டு வந்தா மணி எட்டர. அதுக்கும்பொறவு சாப்பாடு சாப்புட்டு கொஞ்சநேரம் கதையடிச்சுட்டு மறுநாள் வெதப்புக்கு தேவயான சோளப்பைய எடுத்து பிரிச்சு தனியா வச்சுட்டு வந்து கயித்துக்கட்டல எடுத்து வாசல்ல போட்டு அக்கடான்னு படுத்தா மணி பத்து.




இவையனைத்தும் என் கண்முன் நிழலாடியது இன்று காலை நான்காம்முறையாக அலாரத்தை "ஸ்னூஸ்" செய்தபோது.

Wednesday, October 20, 2010

பகிர்வு

PACK MY BOX WITH FIVE DOZEN LIQUOR JUGS

இந்த வார்த்தையின் விசேஷம் என்னவென்றால், ஆங்கிலத்தில் உள்ள இருபத்தாறு எழுத்துக்களும் இதில் உள்ளன.
============================================================================
ஒருத்தர் குளிக்கும்போது ஷாம்பூவ தலைக்கு மட்டுமில்லாம தோளிலும் போட்டார். அவரது மனைவி ஏன்னு கேட்டபோது சொன்னாராம் அந்த ஷாம்பூ பேரு HEAD & SHOULDERSனு.
============================================================================
பரிட்சைஅறையின் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் அந்த ஒரு எடத்துல மட்டும்தான் ஒரு பையன் பொண்னுகிட்ட கொஞ்சமாவது காட்டேன்னு கேக்க முடியும்.
============================================================================
ஒரு நாள் சர்தாரோட அப்பா இறந்துட்டார். உடனே அவரு ஓன்னு அழ ஆரம்பிச்சுட்டார். கொஞ்ச நேரத்தில அவருக்கு ஒரு ஃபோன்கால் வந்தது. அதற்கப்புறம் அழுகை ரொம்ப அதிகமாயிருச்சு. சுத்தி இருந்தவங்க ஏன் என்னாச்சுன்னு கேட்டதுக்கு அவர் சொன்னாராம் "என் தங்கச்சியோட அப்பாவும் இறந்துட்டாராம்".
============================================================================
இந்தியாவிலுள்ள பெண்களில் எழுபது சதவீதம் பேரோட பெயர்கள் "A" என்கிற ஆங்கில வார்த்தையில் முடிவதாகவும், இருபது சதவீதம் பேரோட பெயர்கள் "I" என்கிற ஆங்கில வார்த்தையில் முடிவதாகவும் இருக்காம்.
சந்தேகம் இருந்தா உங்களுக்கு தெரிஞ்ச பெண்களின் பெயர்கள வச்சு சோதிச்சு பாருங்க.
============================================================================
கடந்த வாரம் படித்ததில் எனக்கு பிடித்த ஒரு வாசகம்:

"THERE IS NOTHING LIKE BUSY;
ITS ALL ABOUT PRIORITIES"
============================================================================

பி.கு : கடுமையான பணிச்சுமை மற்றும் எனது இணைய இணைப்பின் குளறுபடி காரணமாக கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக யாரோட வலைப்பூ பக்கமும் வரமுடியாம போயிட்டுது.

Monday, October 4, 2010

நான் இறந்து போயிருந்தேன்

நான் இறந்து போயிருந்தேன்
நீ என்னை விடுத்து
மாற்றானின் கரம் பிடித்த அந்தப்பொழுதில்..
எத்தனை எளிதாய்
மறந்து விட்டாய் அத்தனையையும்!!
உன்னை மறக்கச்சொல்லி
வழக்கமான கதையாய் மாற்றிவிட்டாயே
நம் உன்னத காதலை..
எவ்வளவு ஆத்திரப்பட்டேன் தெரியுமா அன்று..
என்னுள் எறிந்த தீ சொல்லிட்று
உன்னை அடைய
அவள் கொடுத்து வைக்காதவள் என்று...
உனக்காக நான்
தாடி வளர்க்க போவதில்லை.
குடிக்க போவதில்லை.
உன் பெயரை உளறிக்கொண்டு திரியப்போவதில்லை.
மாறாக உன் முன்னால்
நல்வாழ்வு வாழ்ந்து காட்டப்போகிறேன்..
இது சாபமல்ல சபதம்..
இதோ தொடங்கி விட்டேன்
பயணத்தை
எனக்கான என் விடியலை நோக்கி...


பி.கு : பாரத் என்கிற நண்பரின் பின்னூட்டம் காரணமாக ஒரு சிறு முயற்சி.
[பாரத்... பாரதி... said...

"நான் இறந்துப் போயிருந்தேன்..."
இப்படி ஆரம்பிக்க முடியுமா? ஒரு கவிதையை...]

Saturday, October 2, 2010

பணம்


சொந்தஊரைவிட்டு வெகுதொலைவில்
கண்களில் எப்போதும் ஒரு கலக்கம்
உப்பு சப்பில்லாத வாழ்க்கை
அரைகுறை தூக்கம்
நேரங்கெட்ட சாப்பாடு
எதிலும் ஈடுபாடில்லா நிலை
எக்கச்சக்க பிரச்சனைகள்
பெயருக்கு சில நண்பர்கள்
செல்போன் மட்டுமே கடவுளாய்
இத்தனைக்கும் மத்தியில்
நம்மை இயங்கவைக்கும்
மூன்றெழுத்து மந்திரம்.