Pages

Wednesday, October 20, 2010

பகிர்வு

PACK MY BOX WITH FIVE DOZEN LIQUOR JUGS

இந்த வார்த்தையின் விசேஷம் என்னவென்றால், ஆங்கிலத்தில் உள்ள இருபத்தாறு எழுத்துக்களும் இதில் உள்ளன.
============================================================================
ஒருத்தர் குளிக்கும்போது ஷாம்பூவ தலைக்கு மட்டுமில்லாம தோளிலும் போட்டார். அவரது மனைவி ஏன்னு கேட்டபோது சொன்னாராம் அந்த ஷாம்பூ பேரு HEAD & SHOULDERSனு.
============================================================================
பரிட்சைஅறையின் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் அந்த ஒரு எடத்துல மட்டும்தான் ஒரு பையன் பொண்னுகிட்ட கொஞ்சமாவது காட்டேன்னு கேக்க முடியும்.
============================================================================
ஒரு நாள் சர்தாரோட அப்பா இறந்துட்டார். உடனே அவரு ஓன்னு அழ ஆரம்பிச்சுட்டார். கொஞ்ச நேரத்தில அவருக்கு ஒரு ஃபோன்கால் வந்தது. அதற்கப்புறம் அழுகை ரொம்ப அதிகமாயிருச்சு. சுத்தி இருந்தவங்க ஏன் என்னாச்சுன்னு கேட்டதுக்கு அவர் சொன்னாராம் "என் தங்கச்சியோட அப்பாவும் இறந்துட்டாராம்".
============================================================================
இந்தியாவிலுள்ள பெண்களில் எழுபது சதவீதம் பேரோட பெயர்கள் "A" என்கிற ஆங்கில வார்த்தையில் முடிவதாகவும், இருபது சதவீதம் பேரோட பெயர்கள் "I" என்கிற ஆங்கில வார்த்தையில் முடிவதாகவும் இருக்காம்.
சந்தேகம் இருந்தா உங்களுக்கு தெரிஞ்ச பெண்களின் பெயர்கள வச்சு சோதிச்சு பாருங்க.
============================================================================
கடந்த வாரம் படித்ததில் எனக்கு பிடித்த ஒரு வாசகம்:

"THERE IS NOTHING LIKE BUSY;
ITS ALL ABOUT PRIORITIES"
============================================================================

பி.கு : கடுமையான பணிச்சுமை மற்றும் எனது இணைய இணைப்பின் குளறுபடி காரணமாக கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக யாரோட வலைப்பூ பக்கமும் வரமுடியாம போயிட்டுது.

Monday, October 4, 2010

நான் இறந்து போயிருந்தேன்

நான் இறந்து போயிருந்தேன்
நீ என்னை விடுத்து
மாற்றானின் கரம் பிடித்த அந்தப்பொழுதில்..
எத்தனை எளிதாய்
மறந்து விட்டாய் அத்தனையையும்!!
உன்னை மறக்கச்சொல்லி
வழக்கமான கதையாய் மாற்றிவிட்டாயே
நம் உன்னத காதலை..
எவ்வளவு ஆத்திரப்பட்டேன் தெரியுமா அன்று..
என்னுள் எறிந்த தீ சொல்லிட்று
உன்னை அடைய
அவள் கொடுத்து வைக்காதவள் என்று...
உனக்காக நான்
தாடி வளர்க்க போவதில்லை.
குடிக்க போவதில்லை.
உன் பெயரை உளறிக்கொண்டு திரியப்போவதில்லை.
மாறாக உன் முன்னால்
நல்வாழ்வு வாழ்ந்து காட்டப்போகிறேன்..
இது சாபமல்ல சபதம்..
இதோ தொடங்கி விட்டேன்
பயணத்தை
எனக்கான என் விடியலை நோக்கி...


பி.கு : பாரத் என்கிற நண்பரின் பின்னூட்டம் காரணமாக ஒரு சிறு முயற்சி.
[பாரத்... பாரதி... said...

"நான் இறந்துப் போயிருந்தேன்..."
இப்படி ஆரம்பிக்க முடியுமா? ஒரு கவிதையை...]

Saturday, October 2, 2010

பணம்


சொந்தஊரைவிட்டு வெகுதொலைவில்
கண்களில் எப்போதும் ஒரு கலக்கம்
உப்பு சப்பில்லாத வாழ்க்கை
அரைகுறை தூக்கம்
நேரங்கெட்ட சாப்பாடு
எதிலும் ஈடுபாடில்லா நிலை
எக்கச்சக்க பிரச்சனைகள்
பெயருக்கு சில நண்பர்கள்
செல்போன் மட்டுமே கடவுளாய்
இத்தனைக்கும் மத்தியில்
நம்மை இயங்கவைக்கும்
மூன்றெழுத்து மந்திரம்.