Pages

Showing posts with label ???. Show all posts
Showing posts with label ???. Show all posts

Sunday, February 27, 2011

ஆத்தாடி

கடந்த வாரத்தில் ஒரு நாள் அலுவலகத்தில் சில காகிதங்களை சரிபார்த்துக் கொண்டிருந்த போது ஒரு டாக்குமெண்ட் பார்த்து அதிர்ந்து போனேன். ஒரு மனிதர் தனது பெயருக்கு பின்னால் 30க்கும் மேற்பட்ட எழுத்துக்களை வைத்திருந்தார். நாமெல்லாம் ஒரு படிப்ப முடிக்கறதுக்குள்ளயே தட்டுத்தடுமாறிப் போயிடறோம். எப்படித்தான் இப்படியோ??? (தலைப்ப இன்னொருமுறை படிச்சு பாத்துக்கோங்க)

====================================================================

ஒரு சர்தார் வீட்டுல பூனை ஒண்ணு ரொம்ப நாளா தொல்லை பண்ணிட்டு இருந்தது. ஒரு நாள் அவர் அதைக் கொண்டுபோய் ஊருக்கு வெளில விட்டுட்டு வந்தார். வீட்டுக்கு வந்தபோது அவருக்கு முன்னால பூனை வந்திருந்தது. அடுத்தமுறை இன்னும் கொஞ்சம் தூரம் அதிகமா கொண்டுபோய் விட்டுட்டு வந்தார். ஆனா பாருங்க இந்தமுறையும் பூனை அவருக்கு முன்னால வீட்டுக்கு வந்திருந்தது. ரொம்ப கோபமா அதைத் தூக்கிட்டு ஊரைவிட்டு பல மைல் தொலைவில் விட்டுவருவதாக சென்றார். கொஞ்ச நேரத்தில் அவரது மனைவிக்கு ஒரு கால் வந்தது. சர்தாரேதான்.
சர்தார் : அந்த சனியன் புடிச்ச பூனை அங்க இருக்கா?
மனைவி : ஆமாங்க.
சர்தார் : அதை இங்க அனுப்பு. நான் வீட்டுக்கு வர்ற வழியை மறந்து தொலைச்சிட்டேன்.
மனைவி : ?????