Pages

Sunday, November 8, 2009

மொபைலும் நானும்

எனக்கு ஸ்கூல்ல படிக்கிற வயசுல இருந்தே மொபைல் போன் மேல ஒரு அலாதி பிரியம். அப்போ எங்க ஊரிலேயே ஒரு பத்து பேர் கிட்ட தான் மொபைல் இருக்கும். அதிலும் எங்க தெருவுல ரெண்டு பேர் கிட்ட மட்டும் தான் இருக்கும். அவங்கள பார்க்கும் போதெல்லாம் பார்வை தானா மொபைலுக்கு தான் போகும்.அவங்க ரெண்டு பேருமே வயசுல மூத்தவங்க. அதனால கொடுங்க பார்க்கலாம்னு கேட்க முடியல. தூரத்தில் இருந்து பார்த்து ஏக்ககப்பட்டுட்டே இருப்பேன்.

அப்புறம் நான் காலேஜ் சேர்ந்தவுடன் ஆர்வம் இன்னும் அதிகமாச்சு. அப்போ மொபைல் நல்லா பரவ ஆரம்பிச்ச காலம். கல்லூரி நண்பர்கள், ஊரில் உள்ள நண்பர்கள் என நிறைய பேரு வச்சிருந்தாங்க. அதனால யார் மொபைல் வச்சிருந்தாலும் அது என்ன மாடல், என்ன விலை, அதில் என்ன வசதிகள் உள்ளன என ஆராய்ச்சி செய்துகிட்டு இருந்தேன்.

கல்லூரி இறுதியாண்டில் கேம்பஸ் இண்டர்வியூ-ல தேர்வானேன். கடைசி செமஸ்டரின் போது நண்பன் ஒருவன் தன்னோட மொபைல விக்கிறதா சொன்னான். உடனே வீட்டில பேசி மிகுந்த சிரமத்துக்கு நடுவுல Nokia கம்பெனியோட 1100 மாடல் போன் வாங்கினேன்.(வீட்டில சம்மதம் மற்றும் பணம் வாங்க பட்ட கஸ்டம் இருக்கே. அது ஒரு தனி கதைங்க). ஒரு வழியா என்னோட பல வருச எதிர்பார்ப்பு நிறைவேறுச்சுன்னு சொல்லலாம்.

மொபைல் வாங்கினதில இருந்து ஒரு ரெண்டர மாசம் எந்நேரமும் கைல வச்சிட்டே சுத்திக்கிட்டு இருந்தேன். தினமும் ஆயிரக்கணக்கில் மெஸேஜ் அனுப்பிட்டிருந்தேன். அப்புறம் வேலைக்கு சேர்ந்தப்புறம் மொபைல் மோகம் வேற மாதிரி ஆரம்பிச்சுது.(வேலை செய்யுற இடம் அப்படி. என்ன சுத்தி இருந்த எல்லாருமே குறைந்தது ஒரு கேமரா மொபைல் வச்சிருந்தாங்க.) நானும் ரெண்டு வருசமா மாத்தணும்னு நினைச்சு பல பிரச்சினைகளால (வேறென்ன பொருளாதாரம் தான்) வாங்க முடியாம போச்சு.

பிறகு ஒரு வழியா கஷ்டப்பட்டு போன மே மாசம் Sony ericsson கம்பனியோட K810! மாடல வாங்கினேன். இவ்வளவு சிரமப்பட்டு வாங்கின மொபைல பாதுகாக்கிற வேலை இருக்கே அது ஒரு பெரும்பாடு. முன்னல்லாம் 1100 வச்சிருந்தப்ப நான் மழை, வெயில் எதுக்குமே கவலைப்பட்டதில்லை. இப்பல்லாம் எங்கு போனாலும் வந்தாலும் அடிக்கடி பாக்கெட்ட தொட்டு தொட்டு பார்க்க வேண்டியிருக்கு.

ஒரு காலத்திலே வாங்க மாட்டோமா என ஏங்கிய நிலை போய் இன்று மொபைல் இல்லாம ஒரு நாள் கூட இருக்க முடியாது என்ற நிலை வந்து விட்டது. அப்புறந்தாங்க புரிஞ்சது எதுவே அளவோடு இருந்தா எந்த பிரச்சனையும் கிடையாது. அதிகமா இருந்தா அத பாதுகாக்கிறதே ஒரு பிரச்னை ஆயிடும்.

பின் குறிப்பு : நேத்து ரூம்ல மொபைல பார்த்த போது தோணுச்சு. அதான் இப்படி ஒரு ப்ளாஷ்பேக்.

2 கருத்துக்கள்:

cheena (சீனா) said...

அன்பரச

அலைபேசி இன்று இன்றியமையாததாக ஆகி விட்டது.
பரவா இல்லையே - கன்ணில் பட்டதை வைத்து ஒரு இடுகை - வாழ்க

நல்வாழ்த்துகள்

அன்பரசன் said...

நன்றி