Pages

Thursday, December 10, 2009

வேண்டுதல்

எனது மாமா பெயர் முத்து. ஆனால் எல்லோரும் அவரை அப்பன் என்றே செல்லமாக அழைப்பதுண்டு. அவர் இருக்கும் இடம் மிகவும் கலகலப்பாக இருக்கும். அந்த அளவுக்கு ஜாலி பேர்வழி. எல்லோரிடமும் மிகவும் சகஜமாகவும் அன்பாகவும் பழகுவார்.எங்கள் ஊருக்குள் அவரை தெரியாதவர்களே கிடையாது. அந்த அளவிற்கு எல்லோருக்கும் பரிச்சயமானவர். சொல்லப்போனால் அவர் கேலி, கிண்டல் செய்யாத ஆட்களே ஊருக்குள் கிடையாது.

குழந்தைகளை அழ வைப்பது, பெரியவர்களை கண்டால் சட்டைப்பையில் உள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு திருப்பி தர மறுப்பது, ஒரு தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தையை அதன் அம்மா முன்னாலேயே எடுத்து கொண்டு போய் அடுத்த தெருவில் விட்டு வருவது, பரிட்சைக்கு போகும் சிறுவர்களின் பரிட்சை அட்டையை பிடுங்கிக்கொண்டு தர மறுப்பது, அமைதியாக செல்பவரை எந்த காரணமும் இன்றி சிறிது தூரம் துரத்துவது என அவர் செய்யும் சேட்டைகள் ஏராளம்.மொத்தத்தில் அவர் செய்யும் குறும்புகள் அனைவரும் ரசிக்கும் வண்ணம் இருக்கும்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஊருக்கு சென்றிருந்த போது அவரை சந்தித்தேன்.வழக்கமாக சகஜமாக பேசுபவர் இம்முறை நானாக சென்று பேசியும் சரியாக பேசவில்லை. அவரிடம் வழக்கமாக இருக்கும் கலகலப்பு இம்முறை இல்லை.பின்பு நண்பர்களிடம் விசாரித்ததில் தெரிந்தது அவருக்கு ஏழு மாதங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டத்தில் இவ்வாறு ஆனது என்று.ஒரு வாகனம் மோதியதில் அவரது நரம்பு மண்டலம் கடுமையாக பாதிக்கப்பட்டு பல வார சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பி இருக்கிறார்.

சிகிச்சை முடிந்த பிறகும் கூட அவர் பழைய நிலைக்கு திரும்பவில்லை.எதற்கெடுத்தாலும் கோபப்படுவது, அடிக்கடி வீட்டில் சண்டையிடுவது, எப்போதும் எதையோ பறிகொடுத்தவர் போல் இருப்பது என அவரது நடவடிக்கைகள் நேரெதிராக மாறிவிட்டன.உறவினர்கள், நண்பர்கள் எவ்வளவோ முயன்றும் அவரது இந்த நடவடிக்கைகளை மாற்ற முடியவில்லை.

மிக நல்ல குணம் கொண்ட ஒரு மனிதர் இவ்வாறு இருப்பதை என்னால் தாங்க முடியவில்லை.அவர் திரும்பவும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். அவரது பழைய சுறுசுறுப்பு, கலகலப்பு, மகிழ்ச்சி அனைத்தையும் அவர் திரும்ப பெற வேண்டும்.எனது இந்த கோரிக்கையை மட்டும் நிறைவேற்றும் படி ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.

4 கருத்துக்கள்:

cheena (சீனா) said...

அன்பரச

ஆண்டவனை வேண்டினால் அவன் ஆவன செய்வான்

கவலைப்பட வேண்டாம் = விரைவினில் குணமடைய நல்வாழ்த்துகள்

அன்பரசன் said...

நன்றி

gayathri said...

VERAIVUL KUNA MANAMADAIYA KADAVULAI VENDI KOLKIREN

அன்பரசன் said...

நன்றிங்க காயத்ரி