Pages

Tuesday, August 17, 2010

என்ன கொடுமை சார் இது?

என்ன கொடுமை சார் இது?

நேற்றைய கிரிக்கெட் மேட்ச் பார்த்த அனைவருக்கும் எழும் கேள்வி இது தான்.
என்ன தான் விளையாட்டில் வெற்றி தோல்வி முக்கியம் என்றாலும் ஒரு உண்மையான விளையாட்டு வீரனாக இருந்து காட்டியிருக்கலாம் ரந்திவ்.
எங்கே ஒரு ரன் அடித்தால் சேவாக் சதம் போட்டு விடுவாரோ என வேண்டுமென்றே நோ-பால் போட்டு விட்டார்.
கிரிக்கெட் ஜென்டில்மேன் விளையாட்டு என அழைக்கப்பட்டாலும் இவர் போன்றோரால் அந்த பெயருக்கே அவமானம்.
இன்னும் ஒரு பால் மட்டுமே உள்ளது 10 ரன் அடிக்கவேண்டும் என்று இருந்து இவ்வாறு செய்திருந்தால் கூட ஏற்று கொள்ளலாம்.
பாவம் சேவாக் அவரது மனநிலையை சற்று யோசித்து பாருங்கள். சிக்ஸர் அடித்தும் கணக்கில் வராமல் போய் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
என்னத்த சொல்ல.... :( :( :(
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
வல்லபாய் பட்டேல் சிலை:

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிவிப்பு என்னவென்றால் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களுக்கு உலகிலேயே மிகப்பெரிய சிலை அமைப்பராம்.
நர்மதா அணையின் கரையோரம் அமையாப்பொகும் இந்த சிலையின் உயரம் 180 மீட்டராகும்.
மொத்த அணை நிரம்பி இருந்தால் அதன் நீர் மட்டம் 138 மீட்டர் இருக்கும். சிலையின் உயரம் அதை விட அதிகமாக இருப்பது இதன் தனிச்சிறப்பு.
இன்னும் அதிகரப்பூர்வமாக அறிவிப்பு வராவிட்டாலும் சிலை அமைக்கபோவதென்பதோ உறுதி.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
வாழ்த்து:


இன்று 47வது பிறந்த நாள் கொண்டாடும் இயக்குனர் சங்கர் அவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

3 கருத்துக்கள்:

Chitra said...

:-)

priyamudanprabu said...

ரந்திவ் செய்தது முட்டாள் தனம் , தன மீதே சேற்றை வாரி புசிக்கொண்டார்

cheena (சீனா) said...

அன்பின் அன்பரச

செய்திக்குறிப்புகள் நன்று

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா